தமிழ் மருத்துவம்!

தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்! தமிழ் மருத்துவம்!

Thursday 7 July 2016

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம் !


குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விள...ககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.
கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.
கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.
வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்

Monday 11 April 2016

வெங்காயம், பூண்டு, தேன் !!!


உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம்
நம்முடைய இயற்கை விதி மீறல் செயல்களால்
, நம் செல்களுக்கு உள்ளும் , வெளியேயும்... தேங்கும் கழிவுகளே நோய்களுக்கு மூல காரணம்
🌀 இந்த கழிவுகளை வெளியேற்ற
சின்ன வெங்காயம் 1
பூண்டு 1 பல் சாறு எடுத்து
1 டம்ளர் சுடு நீரில் கலந்து
1 ஸ்பூன் தேன் சேர்த்து
காலை மாலை அருந்தினால் செல்களுக்கு உள்ளே உள்ள கழிவுகளும் வெளியேறும்.
🌀 நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிக எளிய குறிப்பு
இரவு ஒரு மண் பாணையில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அடுப்பை அனைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி சீரகம் போட்டு மூடி விட வேண்டும்.
காலையில் அந்த தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.
உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் படிப் படியாக வெளியேறி விடும்.
செல்களில் இருந்து கழிவு வெளியேறினால்
அந்த செல் தன் வேலையை சரியாக செய்யும்
செல் சரியாக உள்ள போது, அதனால் உருவாக்கப்பட்ட திசு சரியாக இயங்கும்
திசு சரியாக இயங்கினால், அதனால் உருவாக்கப்பட்ட உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும்.
உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும் போது மனித உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது.
தகவல் நன்றி :-நண்பர்.திரு.பொன்.தங்கராஜ் 

Sunday 6 March 2016

வாய்வுத் தொல்லை நீங்க!


வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

Tuesday 1 March 2016

டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!


உடலை சுத்தப்படுத்தும் முறைகள் பற்றிய விரிவான குறிப்புகள் !
உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான், நமது ஆரோக்கியத்தி...ன் அடையாளம். சுத்தமாக இருப்பது என்றால், குளித்துச் சுத்தமாக இருப்பது மட்டும் அல்ல... உடலுக்கு உள்ளேயும் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாகவைத்திருப்பதும்தான். அந்தக் காலத்தில், உடலுக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்திக்கு மருந்து எடுத்துக்கொள்வது; நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அல்லது எனிமா எடுத்துக்கொள்வது; இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்தைவிட்டுச் சுத்தப்படுத்துவது; மூன்று நாட்களுக்கு ஒரு முறை கண்களில் அஞ்சனமிடுவது; மாதத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடித்து, நச்சுக்களை வெளியேற்றினார்கள். இதனால், உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டன. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைத்தது. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் கூடின. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. உள் உடலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோன்பு போன்ற வழிமுறைகளில் சுத்தம் செய்வதைப்போல, வெளி உடலைச் சுத்தம் செய்ய மூலிகைக் குளியல் முதல் மண் குளியல் வரை பல விஷயங்களைக் கற்றுத்தந்தன, நம் பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள்.
அதனால்தான் அந்தக் காலத்தில், சனிக்கிழமையானால் விளக்கெண்ணெயைக் கையில்வைத்துக்கொண்டு தாத்தா - பாட்டிகள், குழந்தைகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. உடல் நச்சுக்களைக் குறைக்க, டேப்லெட் தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இதனால், உடலில் நச்சுக்கள் சேர்ந்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ‘நச்சுகளை எப்படி நீக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன’ என விளக்குகின்றனர் ஆயுர்வேத மருத்துவர் தீனதயாளன், சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் மற்றும் இயற்கை மருத்துவர் சோஃபியா தேன்மொழி.
டீடாக்ஸ் என்பது...
நம்முடைய உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் பணியை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால், இவற்றால் எல்லா நச்சுக்களையும் வெளியேற்ற முடிவது இல்லை. நம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையால் உடலில் சேரும் நச்சுக்களை, கழிவுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றுவதை ‘நச்சு நீக்கு சிகிச்சை’ அல்லது ‘டீடாக்ஸிஃபிகேஷன்’ (Detoxification) சுருக்கமாக, ‘டீடாக்ஸ்’ என்கிறோம்.
கிளென்சிங்
சருமத்தைச் சுத்தம் செய்வதை ‘கிளென்சிங்’ என்கிறோம். இதனால், தோலில் உள்ள அழுக்குகள், கிருமிகள், இறந்த செல்களை அகற்றலாம். ஆனால், கிளென்சிங்கால் நச்சுக்களை நீக்க முடியாது. நச்சு நீங்க வேண்டும் என்றால் டீடாக்ஸ் செய்ய வேண்டும்.
டீடாக்ஸ் ஏன் செய்ய வேண்டும்?
நம் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இவை குறைந்த அளவில் இருக்கும்போது பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும். இதனால், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் தன்னுடைய இயக்கத்தைக் குறைத்துக்கொள்ளும். இது தொடரும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படும்; முதுமையை விரைவுபடுத்தும். இளமையிலேயே முதுமையான தோற்றம் ஏற்படும். சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு அதிகரிக்கும்.
யார் டீடாக்ஸ் செய்யலாம்?
எல்லா வகையான நச்சு நீக்க முறைகளையும் பெரியவர்கள் மேற்கொள்ளலாம். இருப்பினும், சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது.ஆலோசனை பெறும்போதுதான், அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப எந்த மாதிரியான நச்சு நீக்க சிகிச்சை பெறுவது என முடிவு செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு வயிற்றைச் சுத்தப்படுத்த, பேதி மருந்து மட்டும் கொடுக்கலாம். இதையும், மருத்துவரின் ஆலோசனையின்படி கொடுக்க வேண்டியது அவசியம்.
நச்சுக்கள் சேரும் காரணங்கள்
உணவு, நீர், காற்று என எந்த ஒரு விஷயமும் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும்.
சுவையூட்டிகள் சேர்ப்பது.
அதிக மசாலா, வனஸ்பதியை உணவில் சேர்ப்பது.
உணவுப் பொருட்களை சரியாகக் கழுவாமல் பயன்படுத்துவது.
சுகாதாரம் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது.
மாசடைந்த நீரைப் பருகுவது.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது.
ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது.
பாமாயிலை உணவில் சேர்ப்பது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது.
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரத்தால் விளைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது.
டீடாக்ஸ் வகைகள்
ஆயுர்வேத சிகிச்சைகள்
‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்... ஏன் டீடாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்?’ எனக் கேட்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவையே உட்கொண்டாலும் உணவு செரிமானம் ஆகும்போதும், ஊட்டச்சத்துக்களை செல்கள் பயன்படுத்தும்போதும் துணைப் பொருட்களாக நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை அகற்றுவதன் மூலம், முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும். நச்சுக்களை நீக்க ஆயுர்வேத மருத்துவம் ‘பஞ்சகர்மா’ சிகிச்சையை அளிக்கிறது. உடலைச் சுத்தப்படுத்த, அதாவது, கிளென்சிங் செய்ய ‘ஷோதனம்’ சிகிச்சையை அளிக்கிறது.
பஞ்சகர்மா
1. நசியம் (Nasiyam)
2. வமனம் (Vamanam)
3. விரேசனம் (Virechanam)
4. கஷாயவஸ்தி (Kashayavasti)
5. ஸ்நேஹாவஸ்தி (Snehavasti)
இந்த ஐந்து வகையான சிகிச்சைகளும்தான் ‘பஞ்சகர்மா’. உடலில் எந்த அளவுக்கு நச்சு இருக்கிறதோ, அதைப் பொறுத்து, எந்த மாதிரியான நச்சு அகற்றும் சிகிச்சை தேவை என மருத்துவர் முடிவு செய்வார். ‘எனக்கு நசிய சிகிச்சை மட்டும் போதும்’ என்றோ, ‘வமன சிகிச்சை கொடுங்கள்’ என்றோ நோயாளி முடிவு செய்ய முடியாது. நோய் மற்றும் நோயாளிகளின் தன்மை, நோயின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொரு சிகிச்சையின் கால அளவும் மருந்துகளின் அளவும் மாறுபடும்.
நசியம்
மூக்கில் செய்யும் சிகிச்சை ‘நசியம்’. மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தை மூக்கில்விடுவார்கள். பிரச்னையைப் பொறுத்து, இரண்டு முதல் ஏழு சொட்டுகள் வரை விடப்படும். மூக்கில் விடும் மருந்து, தலையில் உள்ள உறுப்புக்களுக்குச் சென்று, நச்சு நீக்கும் பணியைச் செய்யும்.
பலன்கள்: சுவாசம் தொடர்பான பிரச்னைகள், நாள்பட்ட நோய்கள், குரல் தொடர்பான பிரச்னை, தீவிரமான தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீவிரமான சைனஸ் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் சிகிச்சை இது.
சுத்தமாகும் பகுதி: மூக்கு முதல் சுவாசப் பாதை வரை சுத்தமாகும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
வமனம்
‘வமனம்’ என்றால், வாந்தி எடுத்தல் என்று பொருள். இதற்காக, மூலிகைகள், பசும்நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தைக் குடிக்கக் கொடுப்பர். மேலும், சில மருந்துகளும் கொடுக்கப்படும். இவை வயிற்றுக்குள் சென்றதும், வாந்தியை ஏற்படுத்தும். வாந்தி வழியாக நச்சுக்கள் வெளியேறும்.
பலன்கள்: சர்க்கரை நோய், உடல்பருமன், தைராய்டு, கல்லீரல், வளர்சிதைப் பிரச்னை, குடிநோயால் பாதிக்கப்பட்டோர் பிரச்னைகள், சரும நோய்கள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: வாய் முதல் வயிறு வரை உள்ள பகுதிகள் சுத்தமாகும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
விரேசனம்
வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதல் என்று பொருள். இதற்கு, மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து கொடுக்கப்படும். மருந்து வயிற்றுக்குள் சென்று வேலை செய்ய ஆரம்பித்ததும், பேதி ஆகும். வயிற்றில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.
பலன்கள்: சரும நோய்கள், சிறுகுடல் தொடர்பான பிரச்னை, பெருங்குடல் இயக்கம் தொடர்பான கோளாறுகள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: உணவுக்குழாயை மட்டும் அல்லாமல், செரிமான மண்டலத்தில் உள்ள கல்லீரல், மண்ணீரல் என எல்லா உறுப்புகளிலும் செயல்படும். இந்தச் சிகிச்சையை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
கஷாய வஸ்தி
ஆசனவாய் வழியாக மருந்தைச் செலுத்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதை ‘வஸ்தி’ அல்லது ‘கஷாயவஸ்தி’ என்பார்கள். இதில், எனிமா கொடுத்துக் கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: தீவிரமான அடி முதுகுவலி, முதுகுத்தண்டு பிரச்னை, மூட்டுப் பிரச்னை, வலி, ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
ஸ்நேஹவஸ்தி
மருத்துவ மூலிகைகள் கலந்த எண்ணெயைக் கொடுப்பர். எண்ணெய் கொடுப்பதால், கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: முதுகுவலி, மலச்சிக்கல், தளர்வடைந்த தசைகள், மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
சித்த மருத்துவ நச்சு நீக்க சிகிச்சைகள்
வேது
நீராவி பிடிப்பதைத்தான் ‘வேது’ என்கின்றனர். இதனை, பல ஸ்பா சென்டர்கள், ஸ்டீம் பாத் ஆக அளிக்கின்றன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், சூடான செங்கல், வெற்றிலை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, எலுமிச்சைச் சாறு ஆகிய மூலிகைகளை வெந்நீரில் கொட்டி, நீராவி பிடிப்பதால், வியர்வை மூலமாகக் கழிவுகள் வெளியேறும். மாதம் இரு முறை நீராவி பிடிக்கலாம்.
சுட்டிகை
வெயிலில் நிற்பதன் மூலம், உடலின் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையைப் பெருகச் செய்யும் சிகிச்சை. வியர்வை வழியாக நச்சுக்கள் வெளியேறும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலை ஏழு மணிக்கு முன், வெயிலில் 15 நிமிடங்கள் நிற்கவைக்கலாம். நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மாலை வெயிலில் 20 நிமிடங்கள் நிற்கலாம்.
தலைக் கழிவு
பற்றுப் போடுவதன் மூலம் நச்சுக்களை அகற்றும் முறை இது. சைனஸ், நீர்கோத்தல் பிரச்னை இருப்போர், நொச்சி, தும்பைப்பூ, தைவேலை ஆகிய மூலிகைகளை அரைத்து, நெற்றியில் பற்றுப் போடலாம். 20 நிமிடங்கள் வரை இதை அகற்றக் கூடாது. இதன் மூலம், தலையில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். அனைவரும், மாதம் இரு முறை போட்டுக்கொள்ளலாம். மழைக்காலத்தில் ஒருமுறை போதும்.
வாந்தி அமர்த்தல்
சித்த மருத்துவர், நோயாளிக்கு மறுக்காரை, கடுகு, உப்பு நீர் கலந்து குடிக்கக் கொடுப்பார். குடித்த உடன் வாந்தி ஏற்படும். இதன்மூலம், இரைப்பையில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
நசியம்
சொட்டு மருந்தை மூக்கில் விட்டுச் செய்யும் சிகிச்சை. உப்பு நீர், சுக்குத் தைலம், நாசிரோகநாசத் தைலம், தும்மைப்பூச் சாறு, தைவேலைச் சாறு ஆகியவை கலந்த மருந்தை, நோயாளியின் மூக்கில் விடுவார். இதை, மாதம் ஒரு முறை செய்யலாம். மூக்கில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். தீராத தலைவலிகள் குணமாகும்.
நாசிகா பரணி
மூக்கில் மூலிகைப் பொடிகளைப் போட்டு, தும்மலை ஏற்படுத்துவது. மூக்கில் சுண்டைக்காய் வேர், சந்தனத் தூள், அக்ராஹாரம் போன்ற மூலிகைகளைத் தூளாக அரைத்துப் போட்டு, தும்மல் உருவாகச் செய்து கழிவுகளை வெளியேற்றுவர். இதையும், மாதம் ஒரு முறை என, பிரச்னை இருப்பவர்களுக்கு மட்டும் சித்த மருத்துவர் பரிந்துரைப்பார்.
கழிச்சல்
வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதலைத்தான் ‘கழிச்சல்’ என்பர். மருத்துவர் ஆலோசனையோடு முருக்கன் விதை மாத்திரை அல்லது எப்சம் உப்பு மற்றும் கீழாநெல்லி சாறு ஆகியவை கொடுக்கப்படும்.
பொதுவான டீடாக்ஸ் முறைகள்
பழங்கள்-இளநீர் டயட்
இரு வாரங்களுக்கு ஒரு முறை, ஒரு நாள் முழுவதும் வெறும் பழங்களை மட்டுமே முன்று வேளையும் எடுத்துக் கொள்ளலாம். 20 வயதுக்கு மேற்பட்டோர், மாதம் ஒரு முறை, இரு வேளைக்கும் சேர்த்து, ஐந்து இளநீர் வரை குடிக்கலாம். இரவில் மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொள்ளலாம். இரவு, உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்கலாம்.
அசோகப்பட்டை நீர்
அசோகப்பட்டையைச் சூரணம் அல்லது கஷாயத்தில் சிறிதளவு கலந்து குடிக்க, கர்ப்பப்பை சுத்தமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.
சீரகக் குடிநீர்
நீரைக் கொதிக்கவைத்து, நன்கு கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு இறக்கி, அன்றைய தினம் முழுவதும் குடித்துவரலாம். வயிற்றுப் பொருமல், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்குச் சீரகத் தண்ணீர் குடிக்கலாம். பசியைத் தூண்டும், செரிமானத்தைச் சீராக்கும்.
பெருநெல்லிச் சாறு
நெல்லிக்காயை விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில், சிறிதளவு தண்ணீர்விட்டு, நன்கு அரைத்து, சாறு பிழிய வேண்டும். இதைத் தினமும் அருந்தலாம். நெல்லியில் ஆன்டிபயாட்டிக் இருப்பதால், கிருமிகள் மற்றும் கழிவுகளை அகற்றும். எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு நல்லது. வளர்சிதை பிரச்னை, அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு, நெல்லிச் சாறு அருந்தலாம். கல்லீரலைச் சுத்தப்படுத்துவதில் நெல்லிக்கு முக்கியப் பங்கு உண்டு.
தினமும் எடுத்துக்கொள்ளக்கூடியவை...
நரம்பு டானிக்... பிரம்மி!
பிரம்மி இலைகள் மற்றும் வேர் போட்டுக் கொதிக்கவைத்த நீரை அருந்தலாம். சின்னச்சின்ன இலைகளாக இருக்கும் இதன் வேரும் நல்லது. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் அனைவரும் அருந்தலாம்.
மரமஞ்சள்
மருந்தாக அல்ல, தினசரி உணவிலேயே சிறிது மரமஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம். இது, அல்சர், வயிற்று எரிச்சல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்தாகும். வயிற்றைச் சுத்தம் செய்யும். கிருமிகளை அழிக்கும். நச்சுக்களை அகற்றும்.
இளநீருடன் ஏலக்காய்
இளநீரில் ஏலக்காய் ஒன்றைத் தட்டிப்போட்டுக் குடிக்க, சிறுநீர் தொற்றைச் சரிசெய்யும். பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் தொற்றைக் குணமாக்கும். கிருமிகளை அழிக்கும்.
சீந்தில்கொடி கஷாயம்
சீந்தில் இலைப்பொடியைக் கஷாயமாக வைத்துக் குடித்தால், எலும்பு, மூட்டுகள் தொடர்பான பிரச்னையைச் சரிசெய்யும்.
கடுக்காய்ப் பொடி
கடுக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து, இரவில் ஒரு கிளாஸ் குடிக்க, மறுநாள் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
எலுமிச்சைச் சாறு
தேன் கலந்த எலுமிச்சைச் சாறு, உடல்பருமனைக் குறைத்து கெட்ட கொழுப்பைக் கரைக்கும். அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
இளநீர்
உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை இளநீர் குடிக்கலாம். அவர்கள் இழக்கும் நீர்ச்சத்தை இளநீரால் மீட்டு எடுக்க முடியும். வெறும் வயிற்றில் குடிக்காமல், உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.
ஏபிசி ஜூஸ்
ஆப்பிள் - 1, பீட்ரூட் - 1/4, கேரட் - 1 ஆகியவற்றுடன் சிறிது புதினா இலைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அப்படியே பருகலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
கிரீன் டீ
ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், கிரீன் டீ உடலின் நச்சுக்களை அகற்றும். புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆவாரம் பூ ஜூஸ்
ஆவாரம் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றைத் தேன் கலந்து ஜூஸாக்கிக் குடிக்க, சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமம் பொலிவாகும். சருமம் பளிச்சென இருக்கும்.
திரிபலா டீ
கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் சேர்ந்த கலவைதான் திரிபலா. ஒரு கப் வெந்நீரில் கால் டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியைப் போட்டு, தேன் கலந்து, வாரம் இருமுறை குடிக்கலாம். கெட்ட கொழுப்பு, கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை அகற்றும்.
அருகம்புல் ஜூஸ்
ஒரு கைப்பிடி அருகம்புல், சீரகம், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து, ஜூஸாக அடித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிக்க, உடலில் உள்ள தேவையற்ற தாதுஉப்புகள் வெளியேறும்.
தாளித்த மோர்
மோரில் புரோபயாடிக் சத்துக்கள் உள்ளன. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் மோர் அருந்துவது நல்லது. வாயு தொடர்பான பிரச்னை, அல்சர், ஆசிட் உருவாவது போன்ற பிரச்னைகளைத் தடுக்கும். மோருடன் சிறிது சீரகம், பெருங்காயம், சின்ன வெங்காயம் கலந்து குடிக்க வேண்டும்.
அஷ்ட சூரணம்
சுக்கு, திப்பிலி, மிளகு, வால் மிளகு கலந்த அஷ்ட சூரணத்தை, மோரில் கலந்து குடிக்கலாம். வாயுத் தொல்லை இருப்பவர்கள் அவசியம் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.
டீடாக்ஸ் டீ
செம்பருத்திப் பூ, தாமரை இதழ் ஆகியவற்றை, சந்தனக்கட்டை ஊறிய நீரில் போட்டுச் சூடாக்கி, தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு சந்தனக் கட்டையை வாங்கி, ஒவ்வொரு முறையும் ஊறவைத்து, மீண்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும்.
இயற்கை மருத்துவத்தில் டீடாக்ஸ்!
கீரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவசியம் சாப்பிடவும்.
ஒரு நாளைக்கு மூன்று நிறக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.
காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுந்திருப்பது நல்லது.
காலை மூன்று முதல் ஐந்து மணி நுரையீரலின் நேரம், என்பதால் சாப்பாடு இல்லாத உடலாக இருப்பதால், சுத்தமான காற்றை கிரகித்துக்கொள்ள உதவியாக இருக்கும். சீரான எண்ணங்கள் தோன்றும். மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். அந்த நாளே உற்சாகமாக மாறும். மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
காலை ஐந்து முதல் ஏழு மணி பெருங்குடலின் நேரம், ஒவ்வொரு மனிதனும் ஏழு மணிக்குள் மலம் கழித்துவிட வேண்டும். முதல் நாள் சேர்த்துவைத்த கழிவுகள் வெளியேறிவிட்டால், உடல் சுத்தமாகிவிடும்.
காலை ஏழு முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவை எடுத்தாக வேண்டும். உணவின் நேரம் தவறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதுபோல மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும்.
தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது நல்லது.
ஆழ்ந்த தூக்கம் இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை இருப்பதாக அமைத்துக்கொள்வது, பல நோய்களை வராமல் தடுக்கும். இந்த நேரம் கல்லீரல் மற்றும் பித்தப்பையின் நேரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தூங்குவது முக்கியம்.
உடலில் கழிவுகள் சேராமல் தடுக்க...
சிறுதானியம், கோதுமை, தவிடு நீக்கப்படாத அரிசி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
பயறு, காய்கறி, கனி வகைகள், தானியங்கள் ஆகியவற்றைச் சுழற்சிமுறையில் சாப்பிடலாம்.
ரவை, மைதா, வெள்ளைச் சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். ரவை, சேமியா ஆகியவற்றில் எண்ணெய் சேர்த்து, உணவைத் தயாரிக்கக் கூடாது.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.
உணவைச் செக்கில் ஆட்டிய எண்ணெயால் சமைப்பது உடலுக்கு நல்லது.
எண்ணெய் குளியல்
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய், ஷீராபலா தைலம், ஏலாதித் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். கண்களுக்குக் குளிச்சியைத் தரும். நல்ல தூக்கம் வரும். அன்று நாள் முழுவதும் லேசான உணவுகளைச் சாப்பிடலாம். இதுவே, உடலில் உள்ள ஆற்றலைப் புதுப்பிக்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு தட்டிப்போட்டு, லேசாகச் சூடு செய்து, முதலில் உடல், பின் தலைமுடி எனப் பூசிய, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.
சாதாரண ஹெட் பாத் இருமுறை எடுக்கலாம்.
பலாஅஸ்வனகந்தித் தைலம் (மருத்துவ மூலிகைகள் கொண்ட நல்லெண்ணெய் இது) போன்ற எண்ணெயை, உடல் முழுதும் 20 நிமிடங்கள் பூசிய பின் குளிக்கலாம்.
டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்
கபாலபாதி
சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக வெளியில்விட வேண்டும். இதில், மூச்சை உள் இழுப்பதற்கு எந்தவிதக் கவனமும் செலுத்த வேண்டாம். அது இயற்கையாகவே நிகழும். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். சத்தத்தை அடக்கிவைக்கத் தேவை இல்லை.
வஸ்திரிகா
சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக இழுத்து, வேகமாக வெளியில் விடலாம். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.
குறிப்பு: ரத்த அழுத்தப் பிரச்னை, ஆஸ்துமா, பைபாஸ் சர்ஜரி செய்தோர் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: இந்த இரண்டு மூச்சுப் பயிற்சிகளும் நுரையீரல், மூக்கு, சுவாசப்பாதை, வயிறு ஆகியவற்றைச் சுத்தம் செய்யும். இந்தப் பயிற்சிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
டீடாக்ஸ் ஆசனங்கள்...
போட் ரைடிங்
காலை நீட்டி உட்கார வேண்டும். பின்புறம் சாய்ந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கைகளைத் துடுப்பு போல கடிகாரத் திசையில் (கிளாக் வைஸ்) சுழற்ற வேண்டும். (சுழற்றும்போது, கையின் கட்டைவிரல்களை உட்புறம் வைத்து மடித்துக்கொள்ளவும்) பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே எதிர் கடிகாரத் திசையில் (ஆன்டி க்ளாக்வைஸ்) சுழற்ற வேண்டும். இரண்டையும் தலா 10 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு: முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், காய்ச்சல் வந்தோர், மாதவிலக்கு நேரத்தில் இருப்பவர்கள் செய்யக் கூடாது.
பலன்கள்: உடல் எடை குறையும். கல்லீரல் சுத்தமாகும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். சர்க்கரை நோயாளிகள் அவசியம் செய்யலாம். உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, சிறந்த பயிற்சி இது. கெட்ட கொழுப்பு நீங்கும்.
டைனமிக் ஸ்பைனல் ட்விஸ்ட்
காலை நீட்டி ‘V’ போல பரப்பிக்கொள்ளவும். கைகளை நேராக நீட்டிக்கொள்ளும்போது மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். வலது பக்கம் உடலை வளைத்து, வலது காலைத் தொடும்போது, மூச்சை விடவும். மீண்டும் மூச்சை இழுத்தபடி நேர் நிலைக்கு வந்து, இடது பக்கம் வளைந்து, இடது காலைத் தொடும் போது மூச்சை விடவும். இது, ஆங்கில எழுத்து ‘X’ போன்ற வடிவமாகத் தெரியும். இந்தப் பயிற்சியை இருபுறமும் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு: கர்ப்பக் காலம், காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.
பலன்கள்: முதுகு வலி சரியாகும். தொடை, வயிற்றுப் பகுதி உறுதியாகும். வயிறு ட்விஸ்ட் ஆவதால், கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் இயக்கம் பெற்று, அந்தப் பகுதிகளில் உள்ள கழிவுகள் வெளியேறும். அடிவயிறு சுத்தமாகும்.
ஃபார்வேர்ட் பெண்டிங்
காலை மடக்கி அதன் மேல் உட்காரவும். பாதங்களை ‘V’ போல விரித்து உட்கார்ந்தால், வலி தெரியாது. காலின் வலது கட்டைவிரல் இடது கட்டைவிரலின் மேல் பதிய வேண்டும். இதுதான் வஜ்ராசனம் போஸ். கையின் கட்டைவிரலை உள்வைத்து மூடி, தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் மேல் வைத்து, முன்பக்கம் குனிய வேண்டும். எழுந்திருக்கும்போது மூச்சை இழுக்கவும். வஜ்ராசன நிலைக்கு வந்த பின், மூச்சை விட்டுவிடவும்.
குறிப்பு: அடிஇறக்கம், பைல்ஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்போர் தவிர்க்கவும். காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் செய்யக் கூடாது.
பலன்கள்: அடிவயிறு அழுத்தப்படுவதால், செரிமானம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மாதவிலக்குப் பிரச்னை சீராகும். தொப்பை கரையும். கெட்ட கொழுப்பு வெளியேறும். உடல் பருமன் குறையும்.
ஐந்து நாட்கள் செய்ய வேண்டிய டீடாக்ஸ் டிரிங்க் டயட்
முதல் நாள் எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
இரண்டாவது நாள், நெல்லிச் சாற்றை அருந்தலாம்.
மூன்றாவது நாள், சாத்துகுடிச் சாற்றைக் குடிக்கலாம்.
நான்காவது நாள், திராட்சை சாற்றைக் குடிக்க வேண்டும்.
ஐந்தாவது நாள், அன்னாசிப்பழ சாற்றை அருந்தி, டயட்டை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக இந்த ஐந்து நாட்களுக்கு இந்த ஐந்து சாறுகளை அருந்துவதே டீடாக்ஸ் டிரிங்க் டயட்.
பலன்கள்: கல்லீரல் சுத்தமாகும். சிட்ரஸ் வகை பழங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை முற்றிலுமாக நீக்கிவிடும். கெட்ட கொழுப்பு நீங்கும். உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வு. மாதத்தில் ஒரு முறை இந்த டீடாக்ஸ் டிரிங்க் டயட்டைப் பின்பற்றலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம். ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் கிடைக்கும்.
உச்சி முதல் பாதம் வரை கிளென்சிங்
கூந்தல்: கரிசலாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை சாப்பிடுவது, குப்பைமேனியைக் கூந்தலில் பூசுவது, சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது போன்றவை கூந்தலைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக்கும்.
ஸ்கால்ப் (மண்டைத் தோல்): மண்டைத் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பூசலாம். மருத்துவ எண்ணெய்களை மருத்துவர் உதவியோடு பயன்படுத்தலாம். ஊறவைத்த வெந்தயக் குடிநீரை வாரம் மூன்று முறை குடிக்கலாம்.
மூளை: வால்நட், மீன், முட்டை, தானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
கண்கள்: பொன்னாங்கண்ணி, பாதாம், கேரட் ஜூஸ், கேரட் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம்.
சருமம்: பப்பாளி, மா, கேரட், சிட்ரஸ் பழங்கள், மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உதடு: வெள்ளரி, பீட்ரூட் சாறு, புதினா ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உணவுக்குழாய்: காரம், எண்ணெய் குறைந்த உணவுகள், நெய், கேரட் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
இதயம்: தாமரைத்தண்டு, செம்பருத்தி, பிளாக்ஸ் விதைகள், நல்லெண்ணெய், பாதாம் ஆகியவை நல்லது.
நுரையீரல்: அகத்திக்கீரை, முள்ளங்கி, திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்
வயிறு: வெண்பூசணி, நீர் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள், முட்டைகோஸ் போன்றவை நல்லது.
கல்லீரல்: கொத்தமல்லி, நெல்லி, கீழாநெல்லி, சிட்ரஸ் பழங்கள், மோர், கரிசாலை, பச்சை நிறக் காய்கனிகள் ஆகியவை கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல்: தண்ணீர், காளான், கேரட் ஆகியவை நல்லது.
கணையம்: ஊறவைத்த வெந்தயம், கொய்யா, மாதுளை சாத்துக்குடி ஆகியவை நல்லது.
சிறுநீரகம்: தாமரைத்தண்டு, பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், சின்ன வெங்காயம், வாழைத்தண்டுச் சாறு, நீர்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
சிறுகுடல், பெருங்குடல்: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள், கீரைகள், இஞ்சி, மோர், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பச்சை, மஞ்சள், சிவப்புக் காய்கனிகள் நல்லது.
கர்ப்பப்பை: கற்றாழை, செம்பருத்திப் பூ, பாதாம், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
எலும்பு: பால், கேழ்வரகு, சிறுதானியம், கொய்யா, நட்ஸ், எள் சாப்பிடலாம்.
நரம்பு: கசப்புச் சுவைகொண்ட உணவுகள், வாழைப்பழம், மூலிகை ஆகியவை நல்லது.
ரத்தம்: சிவப்பு நிற உணவுகள், பேரீச்சை, காய்ந்த திராட்சை, கேரட் ஜூஸ், சுண்டல் சாப்பிடலாம்.
டீடாக்ஸ் என்பதை மருத்துவ சிகிச்சையாகக் கருதாமல், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, நமது பழக்கவழக்கங்களில் ஒன்றாக்கிக்கொண்டாலே, நம் உடலும் மனமும் புத்துணர்வாகி, ஆரோக்கியத்துடன் இருக்கும். டீடாக்ஸ் செய்வோம் நம்முள் மலர்ந்து, புத்துணர்வு பெறுவோம்.

பூனை மீசை மூலிகை ( சீரக துளசி)


சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டுஇருக்கின்றன , நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன , ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன, ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டஉணவுகளைவாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் , முடிந்தவரை அந்தநட்சுபோருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி .
இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும் .இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல .
பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின்செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ ) என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது . மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .
மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .
சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது, கட்டுப்பாடில்லாசர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது, சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .
இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.
சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்..இந்த பூனை மீசை மூலிகை ஒரு சிறு நீரக சீரமைப்பு மூலிகை தேவைபடுபவர் கேட்கலாம்,   Mail ID : seeliexim@gmail.com mob: +91 9942505652. https://web.facebook.com/seeliexim

யாதும் ஊரே யாவரும் கேளிர்'s photo.

Friday 8 January 2016

வெண் புள்ளி நோய்க்கு எளிய மருந்து !!!



1)மேற்பூச்சு மருந்து
பூண்டு சாறு -முப்பது மில்லி
நவச்சாரம் -பத்து கிராம்
...
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து தண்ணீர் விடாமல் பூண்டை மட்டும் இடித்து சாறாகப் பிழிந்து முப்பது மில்லி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நவச்சாரம் பத்துகிராம் நன்கு இடித்துப் பொடியாக்கி கலந்தால் பசை போல் கிடைக்கும்
இந்தப் பசையை வெண்புள்ளிகள் மீது மேற்பூச்சாகப் போட்டு வர வெண்குஷ்டம் நோய் சரியாகும்
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அருகன் தைலம் வாங்கி அதைக் காலையில் பூசி காலை வெயிலில் காலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை நின்று வெண்புள்ளிகள் இருக்கும் இடங்கள் மீது வெயில் படுமாறு தினமும் நின்று வர வேண்டும்
2) உள்ளுக்கு சாப்பிடும் மருந்து
அ)
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவனார் வேம்பு பொடி வாங்கி வந்து ஐந்து கிராம் காலை மாலை உள்ளுக்கு சாப்பிட்டு வர வேண்டும்
ஆ )
காட்டு சீரகம் - அரை தேக்கரண்டி (ஸ்பூன் )
கருப்பு எள் -ஒரு தேக்கரண்டி (ஸ்பூன் )
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் காட்டு சீரகம் வாங்கிப் பொடி செய்து கொண்டு அத்துடன் எள்ளு பொடி செய்து வைத்துக் கொண்டு
மேற் கூறிய அளவுப் படி எடுத்து கலந்து தீநீராக்கிப் பனை வெல்லம் சேர்த்து தினமும் குடித்து வர
ஒரு மண்டலத்தில் அதாவது நாற்பத்தி எட்டு நாட்களில் பரிபூரண குணம் அடையலாம் 

Sunday 20 December 2015

வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம் !

Wednesday 16 December 2015

புலிப்பாணி வாயுசூரணம்


சுக்கு - 20 கிராம்
மிளகு - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்...
ஓமம் - 20 கிராம்
வாய்விளங்கம் - 20 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
இந்துப்பு - 10 கிராம்

இவற்றை முறைப்படி சுத்தி செய்து சூரணம் செய்து காற்று புகாத புட்டியில் அடைக்கவும்.
அளவு : 1/2 தேக்கரண்டி
தண்ணீருடன் அருந்தலாம்.
தீரும் நோய்கள் : வாயு கோளாறுகள், பசியின்மை, விலா நோய், செரிமானம் பாதிப்பு போன்றவை தீரும்.

Thursday 29 October 2015

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!


கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை ப...ிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.
1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,
2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,
3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,
4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,
5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,
6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,
7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.
8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

Monday 19 October 2015

சிறுநீரக கற்களை கரைக்கும் ரண கள்ளி !!!

Baskar Jayaraman's photo.

புண்களை ஆற்றக் கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்க வல்லதும், வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியதும், மருக்கள், காலாணிகளை குணமாக்கும் தன்மையும் கொண்டது ரண கள்ளி. அழகுக்காக வளர்க்க கூடியது ரண கள்ளி. இது கிருமி நாசினியாக விளங்குகிறது. கொசுக்களை விரட்ட கூடிய தன்மை உடையது. ரண கள்ளியை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. மேல்பூச்சு மருந்தாக போடும்போது விஷக்கடிக்கு மருந்தாகிறது.
வலி நிவாரணியாக விளங்கும் ரண கள்ளி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. காலரா, சீதபேதியை தணிக்க கூடியது. சிறுநீரக கற்களை உடைக்க கூடியது. சிறுநீர் சரியாக போகாமல் அடி வயிற்றில் வீக்கம் இருந்தால் மேல்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வீக்கம் சரியாகும். ரண கள்ளி இலையை பயன்படுத்தி சிறுநீரக கற்களுக்கான உள்மருந்து தயாரிக்கலாம். 3 அல்லது 4 இலைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
சிறுநீர் எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் தாரையில் ஏற்படும் அழற்சி சரியாகும். உயர் ரத்த அழுத்தம் சீராகும்.இலைகளை பயன்படுத்தி சிறுநீர் கற்களால் ஏற்படும் வலியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் இலைகளை லேசாக வதக்க வேண்டும். வதக்கிய இலையில் உப்பு தடவி அடிவயிற்றில் பற்றாக போடவும். இவ்வாறு செய்தால் வலி சரியாகும். இலைகளை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: இலைசாறு, புளிப்பில்லாத மோர், உப்பு. இலைகளை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இலைகளை பிழிந்து சாறு எடுக்கவும். 10 முதல் 20 மி.லி சாறு, அரை டம்ளர் மோருடன் சிறிது உப்பு கலந்து காலை, மாலையில் எடுத்துக்கொள்ளலாம். இதனால் வயிற்றுபோக்கு, ரத்த கழிச்சல் குணமாகும். ரத்த மூலம், தடைப்பட்ட மாதவிடாய் சரியாகும். வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது.
புற்றுக்களை உண்டாகும் நச்சுகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது ரண கள்ளி. புண்களை ஆற்ற கூடியது. கள்ளி வகையை சேர்ந்த இது நோய் கிருமிகளை அழிக்கவல்லது. ரத்த கசிவை கட்டுப்படுத்தும். அதிக மாதவிலக்கை சீராக்கும். சிறுநீரை சீராக வெளியேற்றும். இலைகளை பயன்படுத்தி மருக்கள், கால் ஆணிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
ரண கள்ளி இலைகளை நசுக்கி பசையாக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்துவதால் கால் ஆணிகள் குணமாகும். மருக்கள் கரைந்து போகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ரண கள்ளி, காயங்களை ஆற்றக் கூடியது. நாள்பட்ட, அழுகிய மற்றும் சீல் வைத்த புண்களை சீக்கிரம் ஆற்ற கூடியது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

Monday 21 September 2015

‎எலும்பு_முறிவு_தைலம்‬


சிரு செருப்படி பெரு செருப்படை தேள் கொடுக்கு வெள்ளைப்பூ வட்ட கிலுகிலுப்பை துளசி கருந்துளசி ஊமத்தை இவ்விலைகளின் சாறுகள் ஆல் ஆரசு இச்சி பாலை மருதோன்றி முருங்கை கல்லிச்சி மைக்கொன்றை பொன்முருங்கை பூதகரப்பான் நற்ச்சங்கன் வேர் இவற்றின் பட்டைகளின் கியாழம் விளக்கெண்ணை இலுப்பெண்ணை புங்கயெண்ணை நல்லெண்ணை வேப்பெண்ணை ஆகியன சரி அளவு கூட்டி அதில் காசுக்கட்டி களிப்பாக்கு இலவங்கம் இவற்றில் துளையிட்டு மூனறு நாள் ஊறிய பின் டுப்பேற்றி கடுகு திரள் பதத்தில் காய்ச்சி வடிக்கவும் இதனை வெள்ளை துணியில் நனைத்து மேலே போட்டு நெ்நீர் விட்டு உருவி விட முறிந்த எலும்புகள் பொருதிச்சேரும் மூழங்கால் வாதம் சூலை தீப்புண் முதலியன தீரும் _நன்றி
‪#‎மரு_சிவதாசு_7667337444‬

குஷ்டத்திற்கு_மருந்து‬‪--‎மஞ்சிஷ்டாதி_கியாழம்‬


மஞ்சிஷ்டி வேப்பன் ஈர்க்கு ரகத சந்தனம் கோரைக்கிழங்கு சீந்தில் கொடி தும்மட்டி ஆடாதொடை கொத்துப்புங்கன் சிவதை துண்டிகம் மஞ்சள்மரமஞ்சள் நிலவேம்பு வட்ட திருப்பி திவிடையம் கருங்காளி திரிபலை பேய்புடல் கடுகு ரோகனி வாய்விளங்கம் பற்பாடகம் வசம்பு கார் போக அரிசி வெட்பாலை இவைகளை சமஎடை எடுத்து கியாழம் வைத்து குடித்தால் நமைச்சல் மண்டல குட்டம் கிடிப குஷ்டம் பாமா குஷ்டம் விசர்சினை குஷ்டம் விரணம் சித்தம குஷ்டம் சிவித்தர குஷ்டம் அசல குஷ்டம் சப்ததாதுக குஷ்டம் மற்றும் கிருமிகளினால் உண்டான சரும ரேகங்கள் நீங்கி மனமதனைப்பாலிருப்பான்
‪#‎மரு_சிவதாசு_7667337444‬
பாரம்பரிய மருத்துவர் மரு.சிவதாசு's photo.

Sunday 20 September 2015

உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய!!!


நூல்கோல் சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு ...உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து மறுமுறை சாப்பிடவும்

Saturday 19 September 2015

எளிய மருத்துவம்




வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

Friday 18 September 2015

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்






உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.


 வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

உடல் அரிப்பு குணம் பெற:
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு நன்கு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு படிப்படியாக நீங்கும்.

காதில் சீழ்வடிதல் குணமாக:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். இதை காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

இரத்த சோகையை போக்க:
பீர்க்கங்காய் மற்றும் அதன் கொடியின் வேரை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்

Wednesday 16 September 2015

கண் நோய்களை தீர்க்க பாட்டி வைத்தியம்

மனிதர்களின் முக்கிய உறுப்பான கண் மிகவும் மென்மையான உறுப்பாகும். சிலருக்கு பிறவியிலேயே கண் தெரியாமல் இருக்கும். சிலருக்கு விபத்துகள் மற்றும் இதர காரணங்களால் கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது. மாறிவரும் நவீன உலகில் நமது உடலின் பிற உறுப்புகளைப்போல் கண்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. நச்சுப் புகை, கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன்களில் படம் பார்த்தல், அதிக வெளிச்சத்தை உமிழும் விளக்குகள், லேசர் விளக்குகள், அதிக வெளிச்சத்துடன் மிளிரும் கண்கவர் பட்டாசுகள் என கண்களை பாதிக்கும் விஷயங்கள் அதிகம் உள்ளன. எனவே கண்கள் பலம் பெற கீரை, மீன் போன்ற சத்தான உணவுகள் உட்கொள்வதுடன் கண் நோய்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆயுர்வேதம் மற்றும் வீட்டு வைத்திய முறையில் கண் நோய்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.
கண்வலி
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோய் தாக்கும். இது தொற்று நோய் வகையை சேர்ந்தது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பீளையில் அமர்ந்த ஈ மற்றவரின் கண்களில் அமரும்போது மற்றவர்களுக்கும் நோய் பரவும். இந்நோய்க்கு ஒரு வகை வெண்நிற கிருமிகளே காரணம். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் அதில் கணக்கற்ற கிருமிகள் இருப்பதை காணலாம். கண்கை தேடி வருவது சிறிய வகை ஈக்கள். கசகசா விதையைவிட சற்று பருமனாக கருநிறத்தில் இருக்கும். இவைகள் கண்களில்தான் அமரும்.இவற்றை அதிகளவில் பார்க்க முடியாது. ஒரு சில சமயம்தான் கண் அருகே வரும். பெரியவர்கள் இந்த ஈக்களை விரட்டி விடுவர். பெரும்பாலும் சிறியவர்களையே இந்த ஈக்கள் மொய்ப்பதால் சிறியவர்களுக்கே இந்நோய் பாதிப்பு அதிகம். இந்நோய் தொடங்கும்போது கண்ணில் லேசான அரிப்பும், பின்னர் உறுத்தலும் உண்டாகும். 3 நாட்களில் கண்கள் சிவந்து பீளை கட்ட ஆரம்பிக்கும். 5 அல்லது 6 நாட்களில் கண் சிவந்து மண் கொட்டியது போன்ற உறுத்தல் இருக்கும். பகலை விட இரவில் அதிக உறுத்தலும், கடுப்பும் இருக்கும். கண்விழி சிவந்து காணப்படும். கண்களில் பீளைத் தள்ளும். 8 அல்லது 9 நாட்களில் குணமாகி விடும். எனினும் இந்நோயின் தாக்கத்தை குறைப்பது பற்றி பார்ப்போம்.இந்நோய் தொடக்கத்தில், பீளையை அழுக்கடைந்த துணியைக் கொண்டு துடைக்கக் கூடாது. மெல்லிய சுத்தமான துணியை கைக்குட்டை அளவு கிழித்து மஞ்சள் நீரில் நனைத்து உலர வைத்து துடைக்க வேண்டும். அழுக்கான துணி என்றால் கொதிக்கும் வெந்நீரில் போட்டு கசக்கி சுத்தம் செய்து மறுபடியும் மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி பயன்படுத்த வேண்டும். இதனை மற்றவர்கள் எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது. *எந்த வகையான நுண்ணிய விஷக் கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. அது பீளையில் உள்ள லட்சக்கணக்கான கிருமிகளை உடன் அழிக்கும்.
* இரவில் பீளை சேர்ந்து இமைகள் ஒட்டிக்கொள்ளும். இதனால் கூடுதல் வலி ஏற்படும். எனவே காலையில் மிதமான சூட்டில் வெந்நீரில் சிறிது போரிக்பவுடரை கலந்து சுத்தமான பஞ்சினால் நனைத்து சுத்தம் செய்யலாம். ஒருமுறை நீரில் நனைத்த பஞ்சை மறுமுறை நனைக்க கூடாது.
* வெந்நீரில் சுத்தம் செய்தபின் 5 நெல்லிக்காயை உடைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து அந்த தண்ணீரைக் கொண்டு கண்களை காலை மாலை சுத்தம் செய்தால் சீக்கிரமே கண்வலி குணமாகும்.

கண் எரிச்சல் சரியாக
சிலருக்கு கண்ணில் அடிக்கடி எரிச்சல் ஏற்படும். சிலருக்கு வெண்நிற பீளை சேரும். துடைக்க துடைக்க பீளை சேரும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் இவ்வாறு காணப்படும். இதற்கு நெல்லிக்காய் தூள், கடுக்காய் தூள், தான்றிக்காய் தூள் இவைகளை வகைக்கு 8 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக கலந்து அதில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து அதே அளவு சுத்தமான பசு நெய்யில் விட்டுக் குழப்பி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் பூரண குணம் கிடைக்கும். இவ்வாறு 21 நாட்கள் சாப்பிட வேண்டும். இந்த மருந்தை உட்கொள்ளும் போது,அதிக காரம், புளிப்பு, சேர்க்க கூடாது. காரத்திற்கு மிளகும், புளிப்பிற்கு எலுமிச்சையும் எடுக்கலாம்.

கண் பார்வை தெளிவடைய
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலருக்கு கண் பார்வை தெளிவில்லாமல் மங்கலாக இருக்கும். இதற்கு கண் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் பவர் அதிகரிக்கும். ஆனால் கண்ணாடி அணியாமல் பணச்செலவின்றி பாட்டி வைத்தியம் கை கொடுக்கிறது. இதற்கு நெல்லிக்காய் அருமருந்தாகிறது. நன்றாக பழுத்த நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி கனத்த ஊசியை கொண்டு அடுத்தடுத்து இரண்டு மூன்று இடங்களில் குத்திவிட்டால் அதிலிருந்து சாறு வெளியேறும். இந்த சாற்றை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள் வீதம் இரு கண்களுக்கும் விட வேண்டும். காலை மாலை இருவேளையாக 21 தினங்கள் தொடர்ந்து விட்டு வந்தால் பார்வை தெளிவடையும். 7 நாளில் மங்கல் விலகும். 21 நாட்களில் பூரண நலம் கிடைக்கும்.

கண் சிவப்பு குணமாக
சிலருக்கு கண் எப்போதும் சிவந்து காணப்படும். கண்ணில் அடிப்பட்டாலும் கண் சிவக்கும். இதற்கு, நெல்லி விதை 16 கிராம், ஆல்பக்கோடா பழம் 32 கிராம், கடுக்காய் 48 கிராம் வீதம் சேகரிக்க வேண்டும். இதில் கடுக்காயை உடைத்து விதையை எடுத்து விட வேண்டும்.ஆல்பகோடா பழத்தின் விதையை எடுத்து உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்துடன் சேர்த்து எல்லாவற்றையும் அம்மியில் வைத்து தேன்விட்டு மைபோல அரைக்க வேண்டும். இதனை பாட்டிலில் சேகரித்து வைத்து காலை மாலை அரை தேக்கரண்டி குடித்து வந்தால் கண் சிகப்பு மாறும். குணமானதும் நிறுத்தி விடலாம்.

மாலைக்கண் சரியாக
வயோதிகம் காரணமாக சிலருக்கு பொழுது மங்கிய உடன் கண் தெரியாது. இதனை மாலைக்கண் என்பார்கள். இதற்கு நெல்லிக்காய் தூளில் தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேனும் சேர்த்து இரவு ஆகாரத்திற்கு பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர பார்வை தெளிவடையும். - 

Tuesday 8 September 2015

புழுத்தொல்லை

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும்... கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு,
* வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்,
* சிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன.
* அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.
* அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. பைப்பர் சாபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, பைபரேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே, யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.
* நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.
* இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போ ன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

Sunday 6 September 2015

மூல நோய் விரட்ட


சித்தர்கள் - Tamil Scientists's photo.

# வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம...் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும்.
தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார்.
கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும்.
அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
# பாதுகாப்பு முறை:
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.
# ரெசிபி
@ கருணைக்கிழங்கு குழம்பு:
கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.
@ வெந்தயக் கீரை கட்லட்:
கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.
@ பூண்டு சாதம்:
பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
# டயட்
# உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும்.
# முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம்.
# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
# இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம்.
# தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
# வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும்.
# கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும்.
# சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம்.
# சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
பாட்டி வைத்தியம்
@அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.
@ அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
@அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.
@அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
@ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.
@ ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
@ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.
@அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.
@மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
@ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
@இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.
@இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.
@இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில்  நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

இத குடிச்சா தொப்பை குறையுமாம்



பானை போன்று வயிறு வீக்கி உள்ளதா? அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் தினமும் உடற்பயிற்ச...ி செய்து வருதோடு, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால், தொப்பை விரைவில் குறையுமாம்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… அதிலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால், சீக்கிரம் தொப்பை குறைவதைக் காணலாம். ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த பானத்தையும், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மருத்துவ குணங்களையும் காணலாம்.
வெள்ளரிக்காய் தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதிலும் ஒரு முழு வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் நேராது.
கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.
எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புக்களை கரையும். எனவே உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புக்களை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.
கற்றாழை ஜூஸ் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக்களை கரையச் செய்யும்.
ஜூஸ் செய்முறை
வெள்ளரிக்காய் – 1
கொத்தமல்லி – 1 கட்டு
எலுமிச்சை – 1 துருவிய
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 டம்ளர் மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம்.

Sunday 16 August 2015

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!!!!


மூலிகைகளின் தாய் மற்றும் ராணி தான் துளசி. இந்த சிறு இலை பல மகிமைகளைச் செய்யும். அதிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் மூலிகைகளில் துளசியை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம். குறிப்பாக துளசியை உட்கொண்டு வந்தால், சுவாச கோளாறுகளைத் தடுக்கலாம்.
மேலும் துளசி இலை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும். இந்த துளசியானத...ு எண்ணெய் மற்றும் மாத்திரை வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இதன் இலைகளை பச்சையாக உட்கொண்டால், இதன் பலனை முழுமையாகப் பெறலாம்.
அதுவும் தினமும் காலையில் துளசி இலைகளை சிறிது உட்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரைப் பருக வேண்டும். சரி, இப்போது தினமும் இப்படி துளசி இலைகளை உட்கொண்டால் என்ன பலன்களைப் பெறக்கூடும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தலைவலி :-
அடிக்கடி தலைவலியை சந்திப்பவராயின், துளசி இலைகளை உட்கொண்டு வந்தால், அந்த தலைவலியில் இருந்து விடுபடலாம். துளசியில் உள்ள சக்தி வாய்ந்த இரத்தச் சேர்க்கை நீக்கும் பண்புகள் உள்ளதால், இவை தலைவலியைத் தடுக்கிறது. ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் மன அழுத்தத்தினால் தலைவலியை அனுபவித்தால், தினமும் துளசியை உட்கொண்டு வாருங்கள்.
காய்ச்சல் :-
தற்போது பலவகையான காய்ச்சல்கள் வருவதால், அவை எளிதில் மருந்து மாத்திரைகளால் போவதில்லை. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றினால், உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, காய்ச்சலும் குறையும். அதுவும் காய்ச்சல் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு மூன்று முறை துளசி இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
நோய்த்தொற்றுகள் :-
உடலினுள் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருந்தால், துளசி இலையை உட்கொண்டு வர, அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், உடலினுள் உள்ள எந்த வகையான நோய்த்தொற்றுக்களையும் அழித்து வெளியேற்றிவிடும். முக்கியமாக சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.
சிறுநீரக கற்கள் :-
சிறுநீரக கற்கள் இருந்தால், துளசி இலைகளை உட்கொண்டு வாருங்கள். அதிலும் காலையில் முதல் வேளையாக துளசி இலைகளை சிறிது வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாற்றினை விழுங்குங்கள். இதனால் அந்த சாறு சிறுநீரக கற்களை கரைத்துவிடும்.
வாய் ஆரோக்கியம் :-
காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு நன்கு மென்றால், ஈறுகளில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டாலோ, அவை குணமாகும்.
சளி, இருமல் :-
தினமும் காலையில் துளசி இலையை உட்கொண்டவுடன் தண்ணீரை குடித்து வந்தால், அதில் உள்ள இருமல் அடக்கி பண்புகள் இருமலை குறைக்கும் மற்றும் சளி நீக்க பண்புகள் நெஞ்சில் உள்ள சளியை முறித்து எளிதில் வெளியேற்றிவிடும்
நுரையீரல் :-
தினமும் துளசி இலைகளை உட்கொண்டு வருவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஏனெனில் துளசியில் பாலிஃபீனால்கள் நுரையீரலில் நெரிசல்கள் ஏற்படுவதைத் தடுத்து, சீராக சுவாசிக்க உதவும்.
நோயெதிர்ப்பு சக்தி :-
துளசியில் உள்ள கிருமிநாசினி பண்புகள், பல்வேறு வைரஸ் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமைப் பெறும். முக்கியமாக வாழும் வாழ்க்கையின் தரம் அதிகமாகும்

Friday 14 August 2015

நாடாப்புழு

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற‍ …

உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப் புழுக்களை ஒட்டுமொத்த‍மாக வெளியேற்றும் அதிரடிபடை ஒன்றுண்டு.

ஆம்! இந்த பூசணியின்தோலுடன், வெள்ளரி விதையையும் சேர்த்து பொடித்த பிறகு இவற் றுடன் பாலையும், சர்க்கரையையும் தேவை யான அளவு சேர்த்து குடியுங்கள். இதுதான் அந்த அதிரடி படை இதனை குடித்தால் உங்களது வயிற்றில் வாடகை தராமல் உங்களை ஏமாற்றி குடியிருக்கும் வயிற்று கிருமி களும், நாடாப்புழுக்களும் அலறி அடித்துக் கொண்டு மலம் வழியாக வெளியேறி விடும். நீங்களும் அதீத சுகம் காண்பீர்.


Tuesday 11 August 2015

சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து...!


►440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். அவசியம் படிச்சி பார்த்துட்டு கண்டிப்பா செய்தும் பாருங்க
எனக்கு ...தெரிந்த உறவினர் ஒருவருக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும்.
அதன் அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா.??? இருக்கிறது
எனக்கு தெரிந்தவருக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.!!?
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை அவர் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. அவருக்கு பலனாக சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு:-
உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும்.
சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.
Special Tips For Sugar Problem :
நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும்.
5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.

தொப்பை குறைய எளிய பயிற்சி


தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்..முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.
கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவ...ும்.
பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

Monday 10 August 2015

வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கும் சுண்டைக்காய் - இயற்கை மருத்துவம்


சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ண...ெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினரிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். இதை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும்.
மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். தவறான உணவுப் பழக்கம் காரணமாக பலர் வயிறு சம்பந்தபட்ட நோய்களால் துன்பப்படுகிறார்கள். அமீபியாஸ் என்ற வயிற்று நோயால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மலச்சிக்கலும், அதிக மலப் போக்கும் மாறி மாறி தொந்தரவு செய்யும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளும் தோன்றும். இதனால் மனசோர்வு ஏற்படும். இத்தகைய நோயாளிகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் உணவில் சுண்டைக்காயை அடிக்கடி பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்

Sunday 9 August 2015

மார்பக புற்றுநோய்


“புற்றுநோய்” என்று பெயர் வரக் காரணம் என்ன?
– எறும்பின் புற்று அடிப்பாகம் பெரிதாகவும், மேல் பாகம் கூர்மையாகவும், பல கிளைகளாக பரவியும் காணப்படும். அதன் ஓரங்களும் சீராக இருக்காது. புற்று நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உடல்பாகமும் அதுபோல் தெரிவதால் அதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டுவிட்டார்கள். ஆங்கிலத்தில் “கேன்சர்” என்று சொல்வார்கள். கேன்சர் என்ற வார்த்தை “கேன்கர்” என்ற சொல்லிருந்து வந்தது. கேன்கர் என்றால் நண்டு. நண்டின் உடல் நடுவிலும், அதன் கால்கள் பல கிளைகளாக ஓரங்களிலும் தெரிவதுபோல் புற்றுநோயின் பாதிப்பும் தெரிவதால், கேன்சர் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். யாருக்கும், உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். மார்பக புற்றுநோய், உலகில் இரண்டாவது பெரும் நோயாக குறிப்பிடப்படுகிறது.
புற்று நோய் ஏன் வருகிறது?
மனிதனின் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் பொழுதோ அல்லது தேய்மானம் அடையும் பொழுதோ, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்தான், மறுபடியும் பெருகும். இதை தீர்மானிப்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள “நூக்லியஸ்” என்ற உயிர் பொருள். இது குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமான எண்ணிக்கையில், பெருகினால் புற்றுநோய் தோன்றும்.
மார்பக புற்று நோய், மார்பில் உள்ள பால் சுரப்பிகளில் ஏற்படலாம். பால்வரும் குழாய்களிலும் ஏற்படலாம். இந்த குழாய்கள் எல்லாம் சேர்ந்து மொட்டு மாதிரி தோன்றும் மார்பகக் காம்புகளிலும் வரலாம். ஒவ்வொரு பால் சுரப்பியையும் இணைக்கும் கொழுப்பு திசுக்களிலோ அல்லது மற்ற திசுக்களிலோகூட வரலாம்.
மார்பக புற்று நோய் மார்பில் மட்டும் இருப்பதில்லை. அவை அங்கிருந்து பரவி கீழே உள்ள நெஞ்சுக்கூட்டின் திசுக்களில் பரவும். அக்குள்களில் உள்ள நெறிக்கட்டிகளிலோ, இன்னொரு மார்பகத்திலோகூட பரவும். ரத்தத்தின் வழியாக எந்த உறுப்புகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். குறிப்பாக மூளை, சிறுநீரகங்கள் அதிகமாக தாக்கப்படுகின்றன. மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பல காரணங்களை சொல்லலாம். பொதுவாக இது உடலில் உள்ள மரபணுக்களால்தான் (எக்ஙூக்ஞ்கூஷ ஊஹஷஞ்ச்சு) வருகிறது. 5 முதல் 10 விழுக்காடு தாய், தந்தையிடமிருந்து வரலாம். ஆதஇஅ-1 ஆதஇஅ-2 என்று இரண்டு மரபணுக்களை கண்டுபிடித்துள்ளனர். இது தாயிடமிருந்தோ அல்லது தந்தையிடமிருந்தோ வரலாம். ஒருவருடைய ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால், அவருடைய அடுத்த தலைமுறை நபர்களுக்கும் இது வருவதற்கான வாய்ப்பு அதிகம். மது அருந்தும் மங்கையர்களையும், மாதவிடாய் நின்ற பிறகு உடல் பருமனாகிறவர்களையும் இந்த நோய் அதிகம் தாக்கும். உடலில் உள்ள கொழுப்பு திசுக்கள் “ஈஸ்ட்ரோஜன்” என்ற வேதிப் பொருளை சுரக்கின்றன. மாதவிடாய் நிலைத்துப்போகும் `மெனோபாஸ்’ காலத்தை பெண் அடைந்த பின்பு, உடலில் அதிகமாக இருக்கும் ஈஸ்ட்ரோஜன், மார்பக புற்று நோயை தோற்றுவிக்கலாம். புகை பிடித்தல், ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ள மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவது, தவறான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, மன அழுத்தம், மன உளைச்சல், ஆகியவைகளும் மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
உணவு வகைகளில் இன்னமும் தீர்மானமாகச் சொல்லப்படவில்லை என்றாலும் கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சி, கொழுப்பு நிறைந்த பால், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரலாம். சிறு வயதில் பூப்படைதல், மிகவும் தாமதமாக மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல் போன்றவையும் நோய்க் காரணங்களாக சொல்லப்படுகின்றன.
எந்த வயதில் இந்த நோய் அதிகம் தாக்கும்?
30 வயதிலிருந்து 39 வயது வரை 233 பேர்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.
40 வயதிலிருந்து 49 வயது வரை 69 பேர்களில் ஒருவருக்கும், 50 வயதிலிருந்து 59 வயது வரை 38 பேர்களில் ஒருவருக்கும், 60 வயதிலிருந்து 69 வயது வரை 27 பேர்களில் ஒருவருக்கும் மார்பக புற்று நோய் வரலாம். இதன் அறிகுறி என்ன?
முதலாவதாக தென்படுவது மார்பகத்தில் கட்டி. ஆரம்ப நாட்களில் வலி இல்லாமலும், அந்த கட்டியினுடைய ஓரங்கள் சீராக இல்லாமலும் இருக்கும். ஆனால் பல சமயங்களில் தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ வலி ஏற்படுகின்ற கட்டியாகத்தான் இது வருகிறது. மார்பகத் தோலில் எரிச்சல் அல்லது நமைச்சல் அல்லது ஆரஞ்சு பழத்தோலில் இருப்பது போன்ற புள்ளி புள்ளியாக குழிகள், மார்பக காம்புகளில் வலி, வீக்கம், காம்பை சுற்றியுள்ள தோலில் சுருக்கம், நமைச்சலுடன் கூடிய தேமல் போன்ற தோற்றம் எல்லாம் அறிகுறிகள். மார்பகக் காம்புகள் உள்ளிழுக்கப்பட்ட நிலை, சுரப்பிகள் வழியாக ரத்தமோ அல்லது திரவமோ கசிவது, அக்குகளில் நெறிக்கட்டிகள் வீங்கியிருப்பது போன்றவைகளும் அறிகுறிகள்தான்.
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பின்னர் பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யவேண்டும். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரின் பரிந்துரைப்படி `மாமோகிராம்’ முறையில் மார்பகத்தை படம்பிடித்து சோதித்துப் பார்க்க வேண்டும். கட்டிகள் இருப்பின் கட்டியை ஊசி மூலம் துளைத்து அதை பரிசோதிக்க வேண்டும். மார்பக காம்பிலிருந்து கசியும் திரவத்தை ஆராய்ந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.
மார்பக புற்றுநோய்க்கான தீர்வு என்ன?
வருமுன் காப்பது எளிது! வந்த பின்னர் மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது!
சிலருக்கு எளிமையான கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது. சிலருக்கு மார்பகத்தை நீக்கிவிடுவார்கள். கூடவே கீழே உள்ள தசையையும், அக்குகளில் உள்ள நெறிக் கட்டிகளையும் சேர்த்து அப்புறப்படுத்துவார்கள். சிலருக்கு கதிர்வீச்சு வைத்தியம் தேவைப்படும். நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் தேவைப்படலாம். பல வைத்திய முறைகளில் குணப்படுத்தலாம். ஆனால் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை பார்க்க வேண்டும்.
இந்த நோய் வராமலே தடுக்க முடியுமா?
உடற்பயிற்சி தினமும் செய்தால் இந்த நோய் வரும் வாய்ப்பு குறையும். ஒரு நாளைக்கு 45 முதல் 60 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களை பொதுவாக மார்பக புற்று நோய் தாக்குவதில்லை. கேரட், பீட்ரூட், தக்காளி, பூசணி, பரங்கிக்காய், ப்ராக்கோலி, கீரை வகைகளில் “கரடினாய்ட்ஸ்” என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய் வருவதை தடுக்கின்றது.
சிவப்பு திராட்சை, பெர்ரி, பீச், ஆப்பிள், வாழைப்பழம் (குறிப்பாக செவ்வாழை) போன்றவைகளை தினமும் சாப்பிடுபவர்களை மார்பக புற்றுநோய் தாக்கும்தன்மை குறைவு.
பிங்க் மாதமாகிய இந்த அக்டோபரில் ஒவ்வொரு பெண்ணும் `உடல் சுத்தம், மன சுத்தத்தோடு வாழ்வேன். உடற்பயிற்சி செய்வேன். நல்ல உணவுப் பழக்கத்தை மேற்கொள்வேன்’ என்ற உறுதிமொழியை எடுத்து, அதை கடைபிடித்தால் மார்பக புற்றுநோயின்றி வாழலாம். விளக்கம்: டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்) சென்னை – 41.
***
நோயின் பல நிலைகள்
நிலை `0′: புற்றுநோய் பால் குழாய்களில் மட்டும் இருக்கும். மார்பக திசுக்களில் பரவி இருக்காது.
நிலை 1: புற்றுநோய் 2 செ.மீ. அல்லது குறைவாக இருக்கும். மார்பகங்களில் மட்டும் இருக்கும். சிலருக்கு மார்பகங்களில் இருக்காது. அக்குகளில் உள்ள நெறிக்கட்டிகளில் இருக்கும்.
நிலை 2- அ புற்றுநோய் 2 செ.மீ., அளவில் அக்குளில் உள்ள நெறிக்கட்டிகளுடன் சேர்ந்து இருக்கும்.
நிலை 2- ஆ புற்று நோய் கட்டி 5 செ.மீ.க்கு பெரிதாகியிருக்கும். ஆனால் மற்ற இடங்களுக்கு பரவாமல் மார்பகத்தில் மட்டும் இருக்கும்.
நிலை 3- அ கட்டியின் அளவு பெரிதாக இருக்கும். எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.
நிலை 3- ஆ புற்று நோய் மார்பு எலும்பிற்கும் பரவி இருக்கும்.
நிலை 3- இ புற்று நோய் காலர் எலும்பின் கீழ் உள்ள நெறிக்கட்டிகளை தாக்கியிருக்கும்.
நிலை 4: புற்று நோய் மற்ற பாகங்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் பரவி இருக்கும்.
வர்மக்கலை's photo.

மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து

மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய் சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.
மூல நோயில் பித்தம் தீவிரமாக இருந்தால் இரத்தக் கசிவு, எரிச்சல், வீக்கம், வலி, காய்ச்சல், மயக்கம், பசியின்மை, மஞ்சள், பச்சை நிறத்தில் மலம் துர்நாற்றத்துடன் வெளியேறுவது போன்றவை ஏற்படும். கப தோஷத்தால் உருவாகும் மூல நோயில் முளைகள் வழவழப்பாக எண்ணெய்ப் பசையுடன் ஈரக்கசிவுடன் தோன்றும். இதில் வீக்கமும் நமைச்சலும் அதிகமாக ஏற்படும். கால் இடுக்குப் பகுதிகளில் வீக்கம், அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது காய்ச்சல் வாந்தி, வலி இவை நீண்ட நாட்கள் தொடர்ந்து துன்புறுத்தும்.
மூல நோயால் அவதிப்படும் நோயாளிகள் எளிதில் ஜீரணமாகும் வாய்வை சரியாக இயங்க வைக்கும் உணவு, பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு எதிர்மாறான எல்லா உணவுகளையும் பழக்க வழக்கங்களையும் தவிர்க்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. மூல நோயின் வகைகளைப் பொறுத்து அவை மாறுபடும். “தக்ரப்ரயோகம்‘ எனப்படும் மோரைப் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறைப்படி நோயாளியின் உடல் நிலை நோயின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வாரத்திலிருந்து நோயை குணப்படுத்த மோரை விட சிறந்த உணவோ, மருந்தோ கிடையாது. ஜீரண சக்தி மிகவும் குன்றியிருக்கும் நிலையில் மோரை அருந்துவதால் ஜீரண சக்தி மேம்பட்டு நோயும் குணமாகும். ஜீரணக் கோளாறுகளுக்கு மோர் ஒரு அபூர்வ மருந்து. வயிற்வில் வாய்வு, கபம் இரண்டையும் போக்குகிறது.
இப்போதெல்லாம் தயிரைச் சிறிது குழப்பி விட்டு அது தான் மோர் என்று பலர் அருந்துகின்றனர். தயிரின் குணங்கள் மோரின் குணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
சிலர் தயிர் சரியாகத் தோய்வதற்கு முன்பே அதை உட்கொள்கின்றனர். இப்படி அரைகுறையாகத் தோய்ந்த தயிரை சாப்பிட்டால் பல நோய்கள் தோன்றும். சரியான மோரை அருந்த வேண்டும் என்றால் இரவில் பாலைத் தோய்த்து அதைக் காலையில் நன்றாகக் கடைந்து வெண்ணெய் பிரிந்து வந்த பிறகே மோரைப் பருக வேண்டும்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.

Saturday 8 August 2015

தொண்டை புற்று நோய்

குருவின் அனுகிரத்துடன் இதை தொடரவும்
நொச்சி இலை கற்பூரம் நோலா தரைத்தடக்கின்
அச்சமில்லை தாள்புற்றுக் காற்று ......குறள்
விளக்கம்
தினமும் காலையில் நொச்சி இலை சிறிதும் பூகற்பூரம் இரண்டையும் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள் வாயில் உமிழ்நீரில் அடக்கி 10 முதல் 30 நிமிடம் வரை வைத்து வந்தால் புற்று நோய் விலகும்

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

விசேட தகவல்கள்'s photo.


புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, பு...த்துணர்வு பெறவும் உதவுகிறது.
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.
எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.